Saturday, September 22, 2012

அந்நியன் ரேமோ மாதிரி டக்கரா?


இந்தியாவில் காடு வா.. வா... என்று சொல்லும் போது ஜனாதிபதி ஆனவர்கள்தான் அதிகம். ஆனால் நம்ம கலாம் ஐயா மட்டும்தான் முடியை ஸ்டைலா போட்டு அந்நியன் ரேமோ மாதிரி டக்கரா வலம் வந்தார்.

இப்படி பல அருமை பெருமைகளுக்கு சொந்தகாரான நம்ம கலாம் ஐயாதான், “கூடங்குளம் அணுஉலைகள் மிகவும் பாதுகாப்பானவை மூன்றாம் தலை முறையினருக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் கொண்டது என்று கதை விட்டார்.

மேலும் “அணுஉலைகள் இரண்டடுக்கு தடிமன் சுவர் கொண்ட பாதுகாப்பு  முறையில் அமைத்துள்ளதால் கதிர்வீச்சு வெளியே வராது, அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கழிவுகள் கிடைக்கும். அதையும் கடலில் கரைக்க மாட்டோம் என்றார்.

அணுகுண்டுகளை நேசிக்கும் அதேநேரம் குழந்தைகளையும் நேசிக்கும் அதிசய விஞ்சான பிறவியான அபுல்கலாம் ஐயாவுக்கும், மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கும் செருப்படி கொடுக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளது.

1) கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

2). 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது, அதன் பாதிப்பு தற்போதும் உள்ளதே?

3). கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும்?

நியாமான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் நமது அந்நியன் ரேமோ மற்றும் சைலன்ட் MODE சர்தார்ஜி, மற்றும் கூட்டத்தார்கள்.

No comments:

Post a Comment