Thursday, August 9, 2012

3 நகரங்களில் இவ்வருட சுதந்திர தின அணிவகுப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும், அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.


இந்த தேசத்தை அந்நியர்கள் அடிமைப்படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட்ட போதும் நமது முன்னோர்கள் "என்ன நடந்தால் நமக்கென்ன?" என்று இருந்திடாமல் தங்களத உடல், பொருள் அனைத்தையும் துறந்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடி மக்களுக்கு இபோது ஏற்பட்டுள்ளது.


சுதந்திர தின நிகழ்வை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் விதத்திலும், சுதந்திர உணர்வையும், கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் முக்கிய நகரங்களில் "சுதந்திர தின அணிவகுப்பையும்" பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. இந்த அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் மதுரை, நாகை, இளையான்குடி ஆகிய நகரங்களில் "சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி" நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கல் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment