Monday, August 27, 2012

எஸ்.டி.பி.ஐ சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

            

                            
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நேற்று மாலை பெரியார் அரங்கத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுகவின் பொருளாளர் மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.இ. அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் சர்குணம், புதுச்சேரி முன்னால் எதிர்கட்சி தலைவர் நாஜிம், ஜமாத்துல் உலமா ஹிந்தின் தலைவர் மெளலானா மன்சூர் காசிஃபி, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். 

பெரும் திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment