Monday, August 27, 2012

உண்மையின் உரைகல்லா அல்லது பொய்யின் உரைகல்லா?

அசாமில் நடந்த கலவரங்களுக்கு காரணம் வங்கதேச குடியேற்றகாரர்களே என்று தினமலர் ஒப்பாரி வைக்கிறது.

விஷம்கக்கும் தினமலரின் கட்டுரை: காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தை வெளிநாட்டவரின் சொர்க்க பூமியாக  மாற்றியுள்ளது. அசாமில் நடப்பது ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பாகவே தோன்றுகிறது.  இந்தியாவின் மீது ஒரு அமைதியான படையெடுப்பை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது.

காங்கிரஸ் அரசிடம் போதுமான அரசியல் துணிச்சல் இல்லை. வெளிநாட்டினர் நலனுக்கு ஏற்ப, சட்டத்தை காங்கிரஸ் அரசு மாற்றிக் கொண்டுள்ளது. தனது ஓட்டு வங்கியைப் பெருக்கிக் கொள்வதற்காக, வெளிநாட்டினரின் சட்ட விரோத குடியேற்றத்தை காங்கிரஸ் அனுமதிக்கிறது. 

இப்படியாக நீள்கிறது தினமலரின் விஷமம் பிடித்த பதிவு. வங்கதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் அந்த மாநிலத்தின் பூர்விக குடிகள். இவர்களை அந்நிய வந்தேறிகளாக சித்தரித்து அங்கு நடந்த கலவரத்தை நியப்படுத்துகிறது தினமலர். அத்வானி மற்றும் தினமலர் வகைராக்கல்தான் இந்த நாட்டின் வந்தேறிகள். 
                                                         *மலர்விழி*

No comments:

Post a Comment