Tuesday, November 6, 2012

நீயா! நானா! ஜெயிக்க போவது யாரு?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. அமெரிக்காவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். ஒருவர் அதிபராக 2 முறை பதவி வகிக்கலாம்.
 
அமெரிக்காவில் மொத்தம் இரண்டே கட்சிகள்தான் ஒன்று குடியரசு கட்சி, மற்றொன்று ஜனநாயக கட்சி. ஜனநாயக கட்சி சார்பில் 2வது முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார்.
 
அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளது. அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்க அரசியல் நிர்ணய சபை என்று ஒன்று உள்ளது. அந்த சபையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 538 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார். அந்த சபைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெறும் பிரதிநிதிகள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். மொத்தம் உள்ள 538 இடங்களில், 270 பிரதிநிதிகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவரே அதிபராவார்.
 
இந்நிலையில், அனல் பறக்கும் பிரசாரம் நேற்று இரவு முடிந்த நிலையில், 50 மாகாணங்களில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக  தற்போதைய அதிபர் ஒபாமாவும் எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும்  சூறாவளி பிரசாரம் செய்தனர். எனினும், இருவருக்கும் சம பலத்துடன் இருப்பதாக கருத்து கணிப்புகள் தகவல்  வெளியாகி உள்ளது. சில மாநிலங்களில் ஒபாமாவுக்கும் சில மாநிலங்களில் மிட் ரோம்னிக்கு ஆதரவு அமோகமாக உள்ளது. எனினும், வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் மாநிலமாக ஓஹியோ அமைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிந்திக்கவும்: அமெரிக்காவை ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாள் என்ன? எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சும்மா ஒரு செய்திக்காக சொல்லி வைத்தேன் ஐயா. அது சரி நமக்கு நிச்சயமா கவலையில்லை ஆனால் நம்ம மண்ணு மோகன் சிங்கு வகைரா எதிர்பார்த்து காத்து கிடக்கிறதே!

No comments:

Post a Comment