பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலமையகம் சென்னை மண்ணடியில் 12-07-2011 அன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!மாநிலத்தலைவர் சகோதரர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய சகோதரர் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றும்போது பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வழங்கும் உதவித்தொகையை உரிய மக்களுக்கு பெற்றுத்தருவதற்காக இயக்க உறுப்பினர்கள் அறும்பாடுபட்டு அரசு அலுவலகங்களுக்கு சென்று உரிய விண்ணப்பங்களை பெற்று மாவட்ட அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு பூர்த்தி செய்வது போன்ற எண்ணற்ற சேவைகளை செய்துள்ளனர் என்றும் இதன் மூலம் சராசரியாக 55 லட்சம் ரூபாய் உதவித்தொகையை இதன் மூலம் பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
பாப்புலர் ஃப்ரண்டின் அலுவலகங்கள் மக்கள் சேவைக்காகவே திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி வரை சமுதாயத்திற்கு பிரயோஜனம் தரும் வகையில் செயல்படும் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியை சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் யா முஹைதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
பாப்புலர் ஃப்ரண்டின் அலுவலகங்கள் மக்கள் சேவைக்காகவே திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி வரை சமுதாயத்திற்கு பிரயோஜனம் தரும் வகையில் செயல்படும் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியை சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் யா முஹைதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment