Sunday, July 31, 2011

மஸ்ஜித்தை சுத்தம் செய்யும் பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்

கர்நாடக மாநிலம்  பாப்புலர் ஃப்ரண்டின் புத்தூர் கிளை சார்பாக மாவட்டம் முழுவதும் இறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  இஸ்லாமியர்களின் புனித மாதமாம ரமழான் நெருங்கும் வேலையில் மாவட்டம் முழுவதும் உள்ள 40ற்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகளை சுத்தம் செய்யும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புத்தூர் கிளை சகோதரர்கள் மேற்கொண்டனர்.


புத்தூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது. குறிப்பாக இரத்தான முகாம், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம், சமூக மேம்பாடு போன்ற் எண்ணற்ற சேவைகளை செய்து மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பை பெற்று வருகிறது.

வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளில் "வாருங்கள் சுதந்திரத்தின் காவலாளிகளாக!" என்ற வீறிய முழக்கத்தோடு பிரம்மாண்டமான அணிவகுப்புடன் கூடிய சுதந்திர தின கொண்டாத்தட்டை புத்தூரி நடந்த இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment