Wednesday, July 20, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நல்லொழுக்க பயிற்சி(தஸ்கியா)முகாம்

                  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒரு நாள் நல்லொழுக்க பயிற்சி முகாம் பேட்டை சுத்தமல்லி பள்ளியில் வைத்து நடைபெற்றது.இதில் திரளான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.ஒரு நாள் முழுவதும் நடந்த இந்த நிகழ்ச்சி இஷா முதல் மறுநாள் சுபு வரைக்கும் நடைபெற்றது. 
                               
                     இதில் மார்க்க சம்பந்தமாக பல நல்ல தகவல்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தங்களின் ஈமானை அதிகரிக்கவும், இபாதத் சம்பந்த காரியங்களில் முழுமனதுடன் செயலாற்ற உக்கவிக்கும் வகையில் நல்ல பயனுள்ளதாக இருப்பதாக கலந்து கொண்டவர்கள் கூறினார். இதை போல பயிற்சி முகாம் வைப்பதன் மூலம் மக்களை தவறான பாதையில் செல்லாமல் நேர்வழியில் கொண்டு பயணிக்கலாம். இந்த பயிற்சி முகாமிற்கு மேலப்பாளையம் நகரத் தலைவர் முசல் காலிம் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் "நம்மை நாம் புனரமைத்தல்"  என்ற தலைப்பில் கனி அவர்களும், "குடும்பத்தை புனரமைத்தல்" என்ற தலைப்பில் முஹம்மது ஷாபி அவர்களும், "சமுதாயத்தை புனரமைத்தல்" என்ற தலைப்பில் K.S. சாகுல் ஹமீது உஸ்மானி அவர்களும் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில் பேட்டை மஸ்ஜித் இன்ஆம் ஜும்ஆ பள்ளியின் இமாம் K.H.T. சாகுல் ஹமீது அல்தாபி அவர்கள் முடிவுரையற்றினார்.        

No comments:

Post a Comment