Wednesday, August 31, 2011

தூக்குதண்டனையை எதிர்க்கும் தமிழர்கள்! ஆதரிக்கும் ஆரியர்கள்!

தூக்கிலிட ஆதரவு: 1 . முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இவர்களை தூக்கில் போட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.

செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இதற்குமேலும் குறுக்கீடு இருக்கக்கூடாது. மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்’’ அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


தூக்கிலிட ஆதரவு: 2 . இந்து முன்னணி தலைவர் பயங்கரவாதி ராமகோபாலன் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்படியானால்தான் எதிர் காலத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை யாரும் செய்ய பயப்படுவார்கள்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்: தமிழகம் முழுவதும் இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் இந்த சூழலில், இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மட்டும் அதை பகிரங்காமாக ஆதரித்து கருத்து சொல்லி வருகிறார்கள். தூக்குதண்டனை கைதிகளை விடுவிக்க கோரி இளம் பெண் ஒருவர் தீக்குளித்து இறந்து போனார் என்பது இதில் வருத்தத்தோடு கவனிக்கப்பட வேண்டியது. இப்படி தமிழகமே இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் போது கைபர்போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய வந்தேறி கூட்டத்தை சேர்ந்த ராமகோபால ஐயரும், சுப்பிரமணிய சுவாமி ஐயரும் இவர்களை தூக்கில் போடவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.

அறிஞ்சர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் இவர்கள் ஆட்சிகாலத்தில் தூக்குதண்டனை வழங்கப்பட்ட கைதிகளை அதில் இருந்து விடுவித் துள்ளனர். இப்படி ஒருசிறப்பான முன்னுதாரணம் இருந்தும் தமிழக முதல்வர் ஆரிய வழிவந்த பார்ப்பன ஜெயலலித்தா தனக்கு அதிகாரம் இல்லை என்று சட்டசபையில் பேசி இருக்கிறார். தமிழர்களே ஒன்றுபடுங்கள்! மத மாச்சாரியங்களை கடந்து தமிழர்கள் என்ற முறையில் ஒன்றுபட்டு இந்த அநீதியை எதிர்ப்போம். இவர்களை விடுவிக்க இளம் பெண் தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளார் அவரது கனவை தமிழர்கள் நினைவாக்க பாடுபடவேண்டும்.
நட்புடன் - மலர்விழி.

No comments:

Post a Comment