Monday, August 15, 2011

பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின கொண்டாட்டம்

சென்னை: இந்திய தேசத்தின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மண்ணடியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைமையகத்தில் வைத்து தேசியக்கொடி ஏற்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 65வது சுதந்திர தினக்கொண்டாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஒவ்வொரு மாவட்டம் சார்பாக அந்தந்த அலுவலகங்களில் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மண்ணடியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டச் செயலாளர் சகோதரர் முஹம்மது ஷாஹித் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.


தனது உரையில் இந்திய சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் செய்த தியாக வரலாற்றை எடுத்துக்கூறியும், தற்போது ஆதிக்கவர்க்கங்களால் அந்த உண்மை வரலாறு மறைக்கப்பட்டு வருவதையும் தெளிவாக எடுதுக்கூறினார் இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment