Sunday, October 14, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவித்தொகை

12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துள்ள ஏழை மாணவ மாணவியருக்கு தங்களின் கல்லூரி படிப்பு கட்டணத்தை கட்ட உதவும் வகையில் தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வட்டியில்லா கடன் உதவி வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு தேசிய அளவில் 24 லட்ச ரூபாய்க்கான கல்வி உதவி வழங்கப்பட்டது.
இவ்வாண்டும் (2012) பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த கல்வி உதவியினை பெற மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி தொகை வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டு தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்ட 54 மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சென்னையில் 14.10.2012 அன்று மதியம் 2:15 மணியளவில் உதவித்தொகை வழங்கும் விழா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. க‌ஃபூர் இமாம் இறைவசனங்களை ஓதி இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் ஏ.காலித் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு ரூபாய் 68,000/-ற்கான  உதவித்தொகையினை வழங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சமூக மேம்பாட்டுத்துறையின் ஒருங்கினைப்பாளருமான சகோ. ஜுனைத் அன்சாரி இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ முத்து அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். சகோ. ஃபஜ்லுர்ரஹ்மான் மற்றும் ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாநில பொதுச்செயலாளர் ஆபிருதீன் இமாம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  உதவித்தொகை பெறவந்த மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment