Friday, October 26, 2012

பாரதிய ஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது!

பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரி நடத்தி வரும் தொழில்கள் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

புதிய குற்றச்சாட்டுகள்: 1999ஆம் ஆண்டில் கட்கரி மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்குச் சாலை அமைப்பதற்கான அனுமதியை அளித்தார். அதில் ரூ. 165 கோடிக்கு அவர் ஆதாயம் பெற்றார் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

மேலும், இந்த ஊழல் பணத்தை கொண்டு தனது கார் டிரைவர் உள்பட பல்வேறு பினாமிகளின் பெயர்களில் 18 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இது தவிர தனது நிறுவனத்துக்காக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

சிந்திக்கவும்: இந்நிலையில் கட்கரிக்கு கட்சியின் மானம் கெட்ட மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கட்கரி மீதான குற்றச்சாட்டுகள் பாஜகவின் உள்கட்சி விவகாரம் என்று கழுவிற மீனில் நழுவுற மீனா ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
 
பின் குறிப்பு: கர்நாடக பாரதிய ஜனதாவின் முன்னாள் முதல்வர் இடையூரப்பா நில மோசடி முதல் பல்வேறு ஊழல்களை புரிந்தார். இப்பொழுது தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார். இதுதான் இந்த கொள்கை கோமான்களின் யோக்கிதை.
*மலர் விழி*

No comments:

Post a Comment