Sunday, October 21, 2012

மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை!

புதுடெல்லி: இந்தியாவின் பிரபல செல்வந்தரும் கிங்ஃபிஷர் விமான நிறுவனம், கிங்ஃபிஷர் சாராய நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர்  விஜய் மல்லையா வங்கிகளில் இருந்து வங்கிய கடன்தொகை 7000 கோடி ரூபாய்க்கு நாமம் போட்டார்.
 
இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காததால் பெரும்பான்மையான விமானிகள் பணிக்கு வரவில்லை. இதனால் இந்த மாதம் 1 ம் தேதி முதல் கிங் ஃபிஷர் நிறுவனம் விமானங்களை இயக்கவில்லை.
 
இந்நிலையில் விமானங்களை இயக்காதது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. இதற்கு கிங் ஃபிஷர் நிறுவனத்தின் விளக்கம் திருப்தி அளிக்காததால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களில் விஜய் மல்லையா கொடுத்த கிட்டத்தட்ட இருபது லட்சம் டாலருக்கான காசோலைகள் அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திருப்பி வந்த விவகாரம் தொடர்பில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் தொடுத்துள்ள வழக்கின் பேரில் விஜய் மல்லையாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஒன்று பிடிவாரண்டு பிறபித்து இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
சிந்திக்கவும்: மக்களின் பணம் 7000 கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக பெற்று அதை கொண்டு சொகுசுவாழ்க்கை நடத்தினார் விஜய் மல்லையா. இவருக்கு அமெரிக்காவில் பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பெவர்லி கில்ஸ் (Beverly Hills, California ) சொகுசு பங்களா உள்ளது. மக்களை கொள்ளையடிக்கும் இவர்களை போன்ற பணக்கார்களுக்குத்தான் வங்கிகள் கடன் கொடுக்கும். டாட்டா, பிர்லா போன்ற பணக்காரகளின் வியாபாரங்கள் எல்லாம் அரசு கொடுக்கும் மாநியத்தில்தான் நடக்கின்றன. மானியம் எல்லாம் மக்களின் வரிப்பணமே.

No comments:

Post a Comment