Wednesday, October 26, 2011

தலித்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பகையை மூட்ட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

பல்வேறு சமூக, கலாச்சார, மத கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய மக்கள் இந்தியாவில் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கம் சிறு வயது முதலே பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாக்கியமோ வெறும் மேடை பேச்சுக்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்தியாவில் மத மோதல்கள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய  காரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ வெறி பிடித்த தீவிரவாதிகள் தான் என்றால் அது மிகையாகாது.
 
மதக்கலவரம், குண்டுவெடிப்புகள், சிறுபான்மை மக்களின் படுகொலைகள், இந்திய வளங்களை சுரண்டக்கூடிய ஊழல்கள் இப்படி எதை எடுத்தாலும் இந்த அயோக்கிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் பங்கு அதிகம் என்பது ஆராய்ந்து உணரக்கூடிய மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். தாங்கள் எந்த மதத்தினருக்கும் குறிப்பாக சிறுபான்மை மதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய இணையதளங்களுக்குள் சென்று பார்வையிட்டாலோ, அல்லது அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச்சென்று பார்வையிட்டாலே சிறுபான்மை சமூகத்தின் மீது அவதூறையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.

இந்த நாட்டிலே அமைதி சீர்குலைந்ததற்கு காரணமே ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கமும் அதோடு தொடர்புடைய மற்ற இயக்கங்களும் தான். வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியாவில் தங்களது முகவரியை துளைத்துவிட்ட இந்த பரதேசிகள் எப்படியாயினும் தென்மாநிலங்களை வட மாநிலங்களைப் போல் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டுவருகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களாக இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கும் தலித் சமூகத்தினருக்குமிடையே பகையை மூட்டும் வேலையில் தற்போது இறங்கியுள்ளனர் இந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள். பார்பன வெறிபிடித்தவளான ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைந்தது இந்த பரதேசிகளுக்கு ஒரு புது தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது போலும்.

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பல வார்டுகளை ஒன்றினைத்தும் பல வார்டுகளை பிரித்தும் புதிய வார்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்டே முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் வார்டுகளை பிரித்து எந்தப்பகுதியிலும் முஸ்லிம்கள் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்ற நிலை கோவை மாவட்டத்தில் குறிச்சி மற்றும் குஞ்சாமுத்தூர் ஆகிய பகுதிகளில் அதிக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்தந்த வார்டுகள தனித்தனியாக பிரிக்கப்பட்டு மற்ற வார்டுகளோடு இணைக்கப்பட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் அந்தந்த வார்டுகளை தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காக ரிசர்வ் செய்யப்பட்ட வார்டாக அறிவிக்கப்பட்டது. 20,000 வாக்காளர்களை கொண்ட அந்த வார்டில் 90%  முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆனால் அது தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காக ரிசர்வ் செய்யப்பட்டதை கண்டித்து அந்த வார்டு மக்கள் தேர்தலை புரக்கணிக்கப்போவதாக அறிவித்தார்கள்.

ஆனால் தலித் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பது போன்ற செய்தியை கேடுகெட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தங்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களும் தலித்களும் ஒன்றினைந்து கூட்டணியாக செயல்பட்டனர். இதை சீர்குழைக்கும் விதமாக தவறான செய்திகளை பரப்பும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அனைத்து சமுதாய மக்களும் ஒன்றினைந்து போராட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஒழிந்தால் தீவிரவாதம் ஒழியும்!
தீவிரவாதம் ஒழிய ஆர்.எஸ்.எஸ் ஒழிக்கப்படவேண்டும்!

ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment