Sunday, November 13, 2011

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!

ஸ்பெக்ட்ரம் வழக்கில்,  திகார் சிறையில் இருக்கிறார் கனிமொழி. இந்நிலையில்,  கனிமொழி விரைவில் விடுதலை அடைய வேண்டி எம்.பி., வசந்தி ஸ்டான்லி சிறப்பு பூஜை செய்தார். வசந்தி ஸ்டான்லி மேற்கொண்ட சிறப்பு பூஜை, அவரது தனிப்பட்ட விருப்பம்.  இதற்கு கட்சி ஒருபோதும் பொறுப்பேற்காது’’ என்று  கூறினார்.

சிந்திக்கவும்: 
திராவிட கழக கொள்கையில் இருந்து திமுக தடம் பிறண்டு விட்டது என்பதற்கு இதுவெல்லாம் ஒரு நல்ல உதாரணம். ஊழல் வழக்கில் சிக்கி ஒருவர் சிறையில் இருக்கிறார். அவர் ஊழல் செய்யவில்லை என்பதை நிருபித்து வெளியே கொண்டுவரும் திறமை நமது சட்டம் படித்த வல்லுனர்களுக்கே உண்டு. எப்படி
எம்.பி., வசந்தி ஸ்டான்லி செய்யும் பூஜை மூலம் அவர் வெளியே வரமுடியும்  என்பதே நமது கேள்வி.
 
பாளையம் கோட்டை சிறையினிலே பாம்புகள், பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தவர் யார்? அந்த தலைவரின் புகழை பார் என்று தேர்தல் நேரத்தில் நமது தானை தலைவர், தமிழர் தலைவர் கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்கள்தான் நினைவுக்கு வருகிறது. வரும் தேர்தல்களில்  இந்த பாடல்களை மாற்றி ஈழதமிழர்கள் கொல்லப்படும்போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும் நீலி கண்ணீர் வடித்தவர் யார் அந்த தலைவரின் புகழை பார் என்று மாற்றி பாடல்கள் எழுதவேண்டும்.

பாளையங்கோட்டை சிறையினில் பாபுகள், பல்லிகள் எல்லாம் இருக்கா என்று நீங்கள் கேட்க்க கூடாது.  பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த திமுக இப்போது தடம்மாறி போயிவிட்டது. இதை திமுக தலைவர் மஞ்சள்துண்டுகாரர், தமிழர் தலைவர் ( விரோதி) சுயநலக்காரர் கருணாநிதி "இதற்க்கு கட்சி பொறுப்பேற்காது என்று சொல்வது" மடமையிலும் மடமை. இதே நேரம் போட்டு வைத்த திமுக காரர்களையும், தீமிதித்த திமுக காரர்களையும் கேலி செய்த கருணாநிதி இப்போது மட்டும் எனன மவுனம் காட்கிறார்.

தன் மகள் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகவேண்டும் என்றால் தனது பகுத்தறிவு கொள்கை தவறு என்று சொல்லிவிடுவார் என்றே எண்ண தோன்றுகிறது. தனது ஆட்சியை காப்பாற்ற ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை காவு கொடுத்தவர் ஆட்சே புண்ணியவான். தானும் தனது கும்பமும் வாழ எதையும் செய்வார். இவருக்கு ஆட்சி, அதிகாரம், பணம் வேண்டும் யார் எப்படி போனால் என்ன? இன்னும் திமுகவையும், பார்ப்பன சோவின் துக்ளக் ஆட்ச்சியை நடத்தும் ஜெயாவையும் மக்கள் நம்புவதை விட்டொழிக்க வேண்டும். இளைய தலைமுறை முன்வரவேண்டும் தனிதமிழ் நாடு அமைக்கப்பட வேண்டும். இதுவே தமிழர்கள் நலமாய் வாழ ஒரே வழி.

நட்புடன்: மலர்விழி.

No comments:

Post a Comment