Saturday, November 26, 2011

நீதிக்காக மக்களின் உரிமைகள் - கருத்தரங்கம்

சமூக நீதி மாநாட்டின் முதல் நாள் இரண்டாம் அமர்வாக "நீதிக்காக மக்களின் உரிமைகள்" என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், தேசிய பொருளாளர் கே.பி.ஷரீஃப். தேசிய செயற்குழு உறுப்பினரும் தேஜஸ் நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கோயா, ஊடக தொடர்பாளர் அனீஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உட்பட இந்தியாவிலிருந்து பிரமுகர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். இதை பற்றி முழு செய்தி தொகுப்பு பின்னர் வெளியிடுகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.



No comments:

Post a Comment