Wednesday, November 30, 2011

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!

ஈழத்தமிலருக்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த தமிழகத்தின்  வீர மங்கை  செங்கொடிக்கு நினைவு இல்லம் அமைத்து திறப்பு விழா நடத்தப்பட்டது.

ஏற்கனவே தினமலர் நிருபர்
தமிழகத்தின்  வீர மங்கை செங்கொடி அவர்களை பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதால் அதற்கு தக்க பதில் தரும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த, "தினமலர்' நிருபர் மணவாளனை, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

"தினமலர்' நிருபர் மீதான தாக்குதல், மனிதாபிமானமற்ற செயல். தாக்கியோர் மீது
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று தினமலர் ஓலம் இடுகின்றது. இதே தினமலர்தான் சரத்பவாரை தாக்கியவரை ஆதரித்து  ஹிந்துத்துவா அமைப்பு ஒன்று 11 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக கொடுத்ததை ஆதரித்து செய்தி போட்டது.

தமிழர்களின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை.
  அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா?  கூடங்குளத்தில் நடக்கும் மக்கள் போராட்டத்தை திரித்து கொச்சைபடுத்தியது போதாதா?

தமிழர்கள் விழித்து கொண்டார்கள் துரோகிகளை அடையாளம் கண்டுள்ளார்கள்.
வரலாறு திரும்பும் துரோகிகள் பாடம் பெறுவர்.  இந்த ஒரு இடத்தில் மட்டும் இல்லை போகும் இடமெல்லாம் தினமலரை மக்கள் துரத்தி அடிக்கவேண்டும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத பாசிச  சிந்தனை படைத்த தினமலர் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும். தினமலர் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழர்களுக்கு எதிராவவே செய்தி வெளியிட்டு வந்துள்ளது.

ஈழத்து மக்களின் சுதந்திர போராட்டத்தை கொச்சைபடுத்தியது முதல் தமிழக மீனவர்கள் பிரைச்சனை, கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த பிரச்சனை இப்படி எல்லா மக்கள் பிரச்சனைக்கும் எதிராகவே தினமலர் செய்தி வெளியிட்டு வந்துள்ளது.
தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு ஒருபோதும் செய்தி வெளியிட்டதில்லை. ஹிந்துத்துவா இயக்கங்களின், பார்ப்பனியத்தின், வர்ணாசிரம கொள்கையின் ஊதுகுழலாகவே  செயல்படும் தினமலரை மக்கள் தமிழகத்தை விட்டே துரத்தி அடிக்க வேண்டும். மக்கள் விரோத பத்திரிக்கையான தினமலருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரவேண்டும். இதுவே நியாயவான்களின் வேண்டுகோள்.
*மலர்விழி* 

No comments:

Post a Comment