Saturday, November 26, 2011

வலிமையை நோக்கி - கருத்தரங்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாட்டை சரியாக 9:30 மணி அளவில் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் பாப்புலர் ஃப்ரண்டின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடியை ஏற்றி துவக்கி வைத்தார். மாநாட்டின் முதல் நாளான இன்று காலை 10:00 மணி அளவில் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தலைமையில் "வலிமையை நோக்கி" என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாப்புலர் ஃப்ரண்டின் அழைப்பை ஏற்று பங்கெடுத்த சமூக ஆர்வளர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.







No comments:

Post a Comment