Sunday, November 6, 2011

பாப்புலர் ஃப்ரண்டின் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்க்கையையே போராட்டமாக்கி அனைத்து தியாகங்களையும் மேற்கொண்டு தன்னுடைய வாழ்வை மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக்கிக் காட்டிய இப்ராஹீம் (அலை) என்ற ஆபரஹாமை இந்நாளில் நினைவு கூறும் பொருட்டு தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பகுத்தறிவுக்கெதிரான நம்பிக்கைகளின் மூலமும் மக்களை அடிமைப்படுத்திய ராஜ்ஜியங்களுக்கெதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவிட்ட இறைத்தூதர் இப்றாஹீம் (அலை)
அவர்களின் தியாகம்தான் இன்றைய நாளில் நமக்குத் தேவைபடுகிறது.




சர்வதேச அரங்கில் தனிச்சிறப்புமிக்க இடத்தை நோக்கி இந்தியா செல்கையில் இந்தியர்களாகிய நம்முடைய உள்ள உறுதியை ஃபாசிஸமும், தீவிரவாதமும், ஏகாதிபத்தியமும் அச்சுறுத்திப் பார்க்க முயலுகிறது. தேவையான தியாகங்களைச் செய்து நாம் நம்முடைய பாதையில் தொடர்ந்து முன்னேற இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாறு நமக்கு வழி காட்டும்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களாகிய நாம் ஒன்றுபட்டு நிற்போம்; சகோதரத்துவம் பேணி உறுதியுடன் முன்னேறுவோம்!


அராஜகங்களுக்கெதிரான ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான அணியில் இந்தியாவை முன் வரிசையில் நிற்கும் வலிமையான தேசமாக்க நாம் உறுதியெடுப்போம் இந்த தியாகத் திருநாளில்.....!


அனைவருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நெஞ்சம் நிறைந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.



இப்படிக்கு

ஏ.எஸ். இஸ்மாயில், (மாநிலத் தலைவர்)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

No comments:

Post a Comment